கூட்டங்கள், திருவிழாக்கள் இரண்டு வாரங்களுக்கு தடை – புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டது..!!!



இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பொதுக்கூட்டங்கள், கூட்டங்கள் மற்றும் திருவிழாக்களை நடத்துவதற்கு தடை விதித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுகாதார வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளார்.

கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கு தனியார் கல்வி நிலையங்களில் மேலதிக வகுப்புகளை நடத்த இடத்தின் கொள்ளளவில் 50 சதவீதத்துடன் அனுமதிக்கப்படுகிறது.

கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உள்பட்டு பரீட்சைகளும் அனுமதிக்கப்படுகின்றன.
Previous Post Next Post


Put your ad code here