Friday 19 November 2021

சாரதி அனுமதிப்பத்திரம் பெறும் முறைமையில் ஏற்படவுள்ள மாற்றம்..!!!

SHARE

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான எழுத்து மூலப் பரீட்சைகள் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமது திணைக்களத்தினால் நடத்தப்படும் எழுத்து மூலப் பரீட்சைகளுக்கு மேலதிகமாக, குறித்த எழுத்து மூலப் பரீட்சைகளை நடத்துவதற்கு பரீட்சைத் திணைக்களம் திட்டமிடப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் அழககோன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த பகுதியில் சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான எழுத்து மூலப் பரீட்சையில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.
SHARE