இலங்கையில் பொது ஒன்று கூடல்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தண தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அரசாங்கத்திற்கு எதிரான பாரிய போராட்டம் ஒன்றை இன்றைய தினம் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் திட்டமிட்டுள்ள நிலையில், எதிர்வரும் 5 நாட்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 14 ஆயிரத்தை தாண்டியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றினால் நேற்று மேலும் 21 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 16 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று கட்டுப்பாடுகள் மீளெக்கப்பட்ட பின்னர் இலங்கையில் நாளாந்த உயிரிழப்புக்கள் சராசரியாக 20 ஆக பதிவாகிவரும் நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் 5 இலட்சத்து 51 ஆயிரத்து 542 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இலங்கையில் இன்று 16 ஆம் திகதிமுதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை பொது ஒன்று கூடல்களுக்கு தடைவிதிப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலேச குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி, நவம்பர் 1 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை நடைமுறையிலிருந்த கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மறு அறிவித்தல்வரை பொதுக் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் 30 வீதமாக இருந்த உடற்பயிற்சி நிலையங்களில் அனுமதிக்கான அளவு 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தர வகுப்புகளை மாத்திரம் வழமைப்போன்று 50 சதவீதத்துடன் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
அத்துடன் திரையரங்குகளில் இடமளிக்கும் அளவு 25 வீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன், பாலர் பாடசாலைகளை முழுயான திறனுடன் இயக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், வழிபாட்டுத் தலங்களில் தனிநபர் வழிபாடுகளுக்கு மாத்திரம் அனுமதிக்கப்படுவதாகவும் சுகாதார சேவைகள் பிணிப்பாளர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news