Tuesday 23 November 2021

கிண்ணியாவில் விபத்துக்குள்ளான ஆபத்து படகு சேவை – வெளியான முன்னைய வீடியோ.!!!(Video)

SHARE


திருகோணமலை – கிண்ணியா பகுதியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த படகு சேவை ஆபத்தானது என கிண்ணியாவை தளமாகக் கொண்டு இயங்கும் KTV அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

எனினும், இந்த ஆபத்து குறித்து அரசியல்வாதிகள் கவனம் செலுத்தாமையினால், இன்று பல உயிர்கள் காவுக் கொள்ளப்பட்டுள்ளன.

இனியாவது மக்களுக்காக பாலத்தை உரிய வகையில் அமைத்துக் கொடுக்க அரசியல்வாதிகள் முன்வருவார்களா?

இந்த ஆபத்தான படகு பயணம் முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

இந்த காணொளியை பார்த்தேனும், மக்களுக்கு வீதியை செய்ய அரசியல்வாதிகள் முன்வர வேண்டும். 


SHARE