Friday 3 December 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - 25 வயது இளைஞன் கைது

SHARE

 


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு உதவியமை மற்றும் சஹ்ரான் ஹசீமினால் நடாத்தப்பட்டதாக வகுப்பில் கலந்து கொண்டதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஹிங்குல பகுதியில் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
SHARE