முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட ஏ 9 வீதியில், இந்துபுரம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு (14) வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் திருமுறிகண்டி வசந்தநகர் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய சுப்பிரமணியம் முருகேசு (சந்திரன்) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மாங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news