நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை மீண்டும் இயங்குவதற்கு மூன்று நாள்கள் தேவை என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் இயந்திரம் மற்றும் கொதிகலன் செயலிழந்துள்ள நிலையில் அதனை மீண்டும் செயற்படுத்த மூன்று நாள்கள் ஆகும் என்று இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக நாட்டின் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மின்சார விநியோகம் தடைபடலாம் என தெரிவித்த பொது முகாமையாளர், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பும் என நம்பிக்கை வெளியிட்டார்.