இன்று நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் இடங்கள்

 


கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (18) இரவு 11 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


கொழும்பு நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ மேம்பாட்டுத் திட்டம் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 09, 10, 11, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளுக்கு நாளை இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here