Wednesday 1 December 2021

கட்டிட பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து..!!!

SHARE



களுத்துறை, பயாகல, பாளையங்கொட பிரதேசத்தில் உள்ள கடையொன்றில் தீ பரவியுள்ளது.

கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் கடையொன்றில் தீ பரவியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

களுத்துறை தீயணைப்பு பிரிவினரால் தீ அணைக்கப்பட்டது.

எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்படவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும், தீ விபத்தில் கடையின் உரிமையாளருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
SHARE