கொழும்பு பகுதிக்கு 16 மணி நேர நீர்வெட்டு..!!!




கொழும்பின் சில பகுதிகளுக்கு 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டே, கடுவெல மாநகர சபைப் பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ மாநகர சபைப் பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைப் பகுதிகள் மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளுப்பு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post


Put your ad code here