பம்பலப்பிட்டியில் ஏழு மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (28) மாலை பம்பலப்பிட்டி கிரெஸ்டர் பகுதியில் 7 மாடி கட்டிடத்தில் இருந்து சிறுவன் தவறி விழுந்துள்ளான்.
சம்பவத்தில் காயமடைந்த 15 வயது சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதே பிரதேசத்தை சேர்ந்த சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news