Saturday 1 January 2022

மருந்து தட்டுப்பாடு – அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் எச்சரிக்கை..!!!

SHARE

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக பல அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த 3, 4 மாதங்களில் அரச வைத்தியசாலைகளில் உள்ள மருந்தகங்கள் மற்றும் சத்திரசிகிச்சை அரங்குகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் எச்சரித்துள்ளது.

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், மருந்து உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
SHARE