நாவற்குழியில் பாரவூர்தி – கார் விபத்து: ஒருவர் படுகாயம்..!!!


யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் பாரவூர்தியும் காரொன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் நேற்றிரவு(08) நாவற்குழி சந்திக்கும் நாவற்குழி பாலத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காரில் பயணித்தவர் தலையில் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பாரவூர்தியை முந்திச் செல்வதற்கு கார் முற்பட்டபோதே, விபத்து நிகழ்ந்தாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here