வடக்கு முழுவதும் பரவலாக மழைக்கு வாய்ப்பு..!!!


எதிர்வரும் திங்கள் கிழமை வரை வடமாகாணம் முழுவதும் பரவலான மழை கிடைக்கும் என யாழ்.பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கூறியுள்ளதாவது,

கீழை காற்றின் செல்வாக்கின் காரணமாக நேற்று தொடக்கம் எதிர்வரும் திங்கள் கிழமை வரை வடமாகாணத்தில் பரவலாக மழை பெய்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளது.

குறிப்பாக வன்னி பிராந்தியத்தில் பரவலாக மழை பெய்யும் என்றும், இதனால் நெல் அறுபடை செய்ய காத்திருப்போார் உரிய முன்னேற்பாடு மற்றும் திட்டமிடல்களை கொண்டு அறுப்படையை செய்யுமாறு அவர் மேலும் கூறியுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here