Friday 7 January 2022

நாட்டின் சில பகுதிகளில் இன்று மாலை மின்தடை..!!!

SHARE

நாட்டின் சில பகுதிகளில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை சுழற்சி முறையில் 01 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மின்சார சபைக்கு எண்ணெய் விநியோகம் முறையாக முன்னெடுக்கப்படாததால் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
SHARE