சுன்னாகத்தில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!


மோட்டார் சைக்கிளை திருடி தப்பி சென்ற திருடர்கள் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ராசா ரவிச்சந்திரன் (வயது 50) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சுன்னாகம் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள வீதி சமிஞ்சை விளக்கு பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுன்னாகம் மதுபான சாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிளை தென்மராட்சியைச் சேர்ந்த இருவர் திருடி தப்பியோடுவதனை மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் கண்டுள்ளார்.

அதனை அடுத்து, மோட்டார் சைக்கிள் உரிமையாளர் உளிட்டோர் துரத்திச் சென்ற நிலையில் திருடர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் சுன்னாகம் சந்தி வீதி சமிஞ்சை விளக்கு பகுதியில் எதிரே வந்தவரை மோதித்தள்ளியது.

அதில் சம்பவ இடத்திலேயே அதிக குருதிப் போக்கு போன நிலையில் அவர் உயிரிழந்தார்.

விபத்தினை ஏற்படுத்திய இருவரும் பிடிக்கப்பட்டு சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here