உயிரை பாதுகாக்க தடுப்பூசியைத் தவிர வேறு வழி இல்லை!

 


கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தடுப்பூசியைத் தவிர வேறு எதனாலும் பாதுகாப்பை வழங்க முடியாது என்று அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து பண்டிகை கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுபடவுள்ளனர்.

மறுபுறம் கொரோனா பரவலும் அதிகரித்துள்ளது. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தடுப்பூசியைத் தவிர வேறு எதுவும் கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்காது.

முந்தைய தொற்றை ஒப்பிடுகையில் ஒமிக்ரோன் வேகமாக பரவுகிறது. பதற்றமடைய வேண்டாம். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.
Previous Post Next Post


Put your ad code here