Friday 21 January 2022

நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

SHARE

 


மிதிகம பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துர்கி கிராமத்தில் நேற்று (20) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

படுகாயமடைந்த 46 வயதுடைய நபர் வலான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவரை கைது செய்ய விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
SHARE