குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

 


தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.


மனோரஞ்சன் சுரேஷ் (வயது 31) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் இணுவில் பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக கடந்த பத்து நாட்களாக அவரது மாமனாருடன் சுதுமலையில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சுதுமலையில் அவர் வசித்து வந்த வீட்டிற்கு அருகாமையில் இன்று அதிகாலை தூக்கில் சடலமாக காணப்பட்டார்.

மானிப்பாய் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here