பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு..!!!




கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்காக எதிர்வரும் பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 07 ஆம் திகதி பாடசாலை பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here