யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்கு ஒரு நாடாளுமன்ற ஆசனம் அதிகரிப்பு..!!!


தேர்தல் பதிவுகளின் அடிப்படையில் கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மீளவும் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, கம்பஹா மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை 19ல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு ஒரு நாடாளுமன்ற ஆசனம் சேர்க்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்கான மொத்த ஆசனங்கள் 6ல் இருந்து 7 ஆக அதிகரிக்கப்படும்.

அடுத்த தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை விவரங்கள் அடங்கிய அரசிதழ் அறிவித்தலை வெளியிடுவதற்கு நேற்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here