யாழில் இருந்து தமிழகம் சென்ற இளைஞர்கள் இருவரும் புழல் சிறையில் தடுத்து வைப்பு..!!!


இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் நேற்று (28) தமிழகத்திற்குள் நுழைந்த இளைஞர்கள் இருவரும் புழல் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

27 மற்றும் 34 வயதான இரண்டு இலங்கையர்களையும் தனித்தனி அறையில் வைத்து மத்திய உளவுத்துறை, Q-பிரிவினர் , புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் குறுக்கு விசாரணை நடத்தியுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்திற்குள் கடல் மார்க்கமாக நுழைந்த இரண்டு இலங்கையர்களும் பொருளாதார பாதிப்பிற்குள்ளாகி அகதிகளாக தஞ்சமடைவதற்கான எவ்வித காரணங்களும் விசாரணைகளின் போது புலனாகவில்லை என தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் கடவுச்சீட்டு இன்றி சட்டவிரோதமாக வந்ததாகக் கூறி இராமநாதபுரம் – தேவிபட்டினம் பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு இலங்கை இளைஞர்கள் தொடர்பாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவவிடம் வினவியபோது, அவர்கள் தொடர்பிலான மேலதிக தகவல்களை திரட்டி வருவதாக அவர் கூறினார்.
Previous Post Next Post


Put your ad code here