புதிய பிரதமருடன் இடைக்கால அமைச்சரவையை ஸ்தாபிக்க ஜனாதிபதி இணக்கம்..!!!


புதிய பிரதமருடன் புதிய இடைக்கால அமைச்சரவையை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விருப்பம் தெரிவித்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பின்னர் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி, பின்னர் சுயாதீனமாக செயற்படும் கட்சிகள் மற்றும் 11 அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர்.

இதன்போது, தேசிய இணக்க அரசாங்கத்தில் இணைந்துகொள்ளும் கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய தேசிய சபை ஒன்றை ஸ்தாபித்து, அதனூடாக பிரதமர் மற்றும் அமைச்சரவையை பெயரிடுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு, ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

ஆளும் கட்சியிலிருந்து சுயாதீனமாக செயற்படும் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் தலைமையில் தேசிய சபை நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
Previous Post Next Post


Put your ad code here