Sunday 10 April 2022

நீரில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழப்பு

SHARE

 


நெலுவ பிரதேசத்தில் நீரில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அம்பலேகெதர வீதியின் குறுக்கே நிரம்பி வழியும் இன்கல் ஓடையின் ஊடாக வீதியைக் கடக்க முற்பட்ட போது தாயுடன் நான்கு பிள்ளைகள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களில் ஒரு சிறுவன் மாத்திரம் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பலேகெதர பகுதியைச் சேர்ந்த 08 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
SHARE