11 பரல்களில் எரிபொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த சுன்னாகத்தில் இருவர் கைது..!!!


சுன்னாகம் பொலிஸ் பிரிவில் 11 பரல்களில் எரிபொருள்களைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

8 பரல்களில் மண்ணெண்ணெய், 2 பரல்களில் பெற்றோல் மற்றும் ஒரு பரல் டீசல் என்பனவே கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சுன்னாகம் மயிலங்காடு – குப்பிளான் பகுதியில் உள்ள வீடொன்றோடு இணைந்த கடை ஒன்றிலிருந்தே நேற்று மாலை இவ்வாறு எரிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பெற்றோல் ஒரு லீற்றர் 500 ரூபாய்க்கு விற்பனை செய்த போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரே இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

மண்ணெண்ணெய் சுமார் ஆயிரத்து 670 லீற்றர், பெற்றோல் சுமார் 310 லீற்றர் டீசல் சுமார் 200 லீற்றர் கைப்பற்றப்பட்டுள்ளன.

49 மற்றும் 40 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Previous Post Next Post


Put your ad code here