21 ஆவது திருத்தச் சட்டம் அமைச்சரவையில் சமர்பிப்பு..!!!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கட்டுப்பாடற்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் அரசியலமைப்பின் 21வது திருத்தம் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனையை முன்வைத்ததாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

“அமைச்சரவை அமைச்சர்கள் இப்போது கட்சித் தலைவர்களுக்கு முன்மொழிவை பரிந்துரைத்துள்ள நிலையில், இது அடுத்த வாரம் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்படும்” என்று அமைச்சர் மேலும் கூறினார்.

21வது திருத்தம், ஜனாதிபதிக்கு எதிராக பாராளுமன்றத்தை பலப்படுத்திய 19வது திருத்தத்தை இரத்து செய்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்கிய 20 வது திருத்தத்தை ரத்து செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தற்போதுள்ள ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துவதற்கும் அவற்றை சுயாதீனமாக்குவதற்கும் முயற்சிக்கிறது.

இந்த பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.


Previous Post Next Post


Put your ad code here