
கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 4 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சட்டத்தரணிகளின் தலையீட்டின் பின்னர் சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று (28) இரவு உலக வர்த்தக மையத்திற்கு அருகில் உள்ள வங்கி அவென்யூவுக்குள் நுழைய முயன்றனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்
Tags:
sri lanka news