யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்த அரிய சம்பவம் பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியதுடன், குழந்தைகள் மே 24, 2025 அன்று பிறந்ததாகக் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், ஐந்து குழந்தைகளும் தற்போது சிறப்பு குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். தாய் மற்றும் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.