Sunday 29 May 2022

கோடிக்கணக்கான பெறுமதியுள்ள முத்துக்களுடன் ஒருவர் கைது..!!!

SHARE



76 முத்துக்களை வைத்திருந்த நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் (STF) கைது செய்துள்ளனர்.

இங்கினியாகல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த முத்துகள் ஒவ்வொன்றும் சுமார் 10 லட்சம் ரூபா முதல் 50 லட்சம் ரூபா வரை விற்பனையாவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீப காலங்களில் கைப்பற்றப்பட்ட பாரிய அளவான முத்துக்களின் தொகை இதுவாகும்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அம்பாறை தேவாலய பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.


SHARE