மே 7 ஆம் திகதியும் சில பாடசாலைகளுக்கு பூட்டு..!!!



உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக மே 7 ஆம் திகதியும் பல பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பின்வரும் பாடசாலைகளை தவிர, அனைத்துப் பாடசாலைகளும் அன்றைய தினம் வழமைப் போல் செயல்படும் என்று அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாளை (06) நடைபெறவுள்ள தேர்தல் காரணமாக, நாட்டின் அனைத்துப் பாடசாலைகளுக்கு இன்றும் (05) மற்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மே 7 ஆம் திகதி மூடப்படும் சில பாடசாலைகள் பின்வருமாறு...

கொழும்பு ரோயல் கல்லூரி

மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரி

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி

மட்டக்களப்பு இந்துக் கல்லூரி

திருகோணமலை விபுலானந்தா கல்லூரி

புத்தளம் சாஹீரா கல்லூரி

பதுளை மத்திய மஹா வித்தியாலயம்
Previous Post Next Post


Put your ad code here

gtag('config', 'G-R9FPB20LQQ');