லிட்ரோ எரிவாயு விநியோகம் புதன்கிழமையே வழமைக்கு..!!!



3500 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுடன் கப்பலொன்று நாளைய தினம் நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு கப்பலிலிருந்து இறக்கப்பட்டு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட பின் எதிர்வரும் புதன்கிழமை முதல் அதனை பகிர்ந்துளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க அந்த நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் கருத்து தெரிவிக்கையில்;

காலநிலை சீராக அமையுமென்றால் குறித்த கப்பலை கெரவலப்பிட்டி லிட்ரோ நிறுவனத்துக்கு சொந்தமான முனையத்தில் நங்கூரமிட்டு பத்து மணித்தியாலங்களில் அதனை பரிசீலிக்கும் நடவடிக்கைகளை நிறைவு செய்ய முடியும். அதற்கிணங்க எதிர்வரும் புதன்கிழமை முதல் வழமையான சமையல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, இரண்டு தினங்களுக்கு அநாவசியமாக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என மக்களை கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்த அவர் சமையல் எரிவாயுடன் மேலும் இரண்டு கப்பல்கள் இந்த வாரம் நாட்டுக்கு வந்தடையவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here