Thursday 12 May 2022

ஆறாவது முறையாக ரணில் பிரதமரானார்; ஜனாதிபதி முன் பதவியேற்றார்..!!!

SHARE

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதன்மூலம் ஆறாவது முறையாக இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்றுள்ளார். அத்துடன், நாட்டின் 14ஆவது பிரதமராக அவர் பதவி வகிக்கிறார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவை அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கியதாக வரும் நாள்களில் நியமிக்கப்படவுள்ளது.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற 9ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியடைந்த நிலையில் அக்கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்று ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த ஆண்டு பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு பிரதமராக பதவியேற்று அரசை தலைமையேற்கவுள்ளார்.


SHARE