மூவரின் உயிரை பறித்த கோர விபத்து..!!!
பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியில் மனம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (01) அதிகாலை தனியார் பஸ் ஒன்றும் முச்சக்கரவண்டியும் மோதிக் கொண்டபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக மன்னம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கணவனும் மனைவியும் அவரது உறவினர் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்