Sunday 1 May 2022

நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள்..!!!

SHARE



சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று (01) நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை அரசியல் கட்சிகள் மற்றும் தொழிலாளர் அமைப்புக்கள் ஏற்பாடு செய்துள்ளன.

மே தின கொண்டாட்டத்தை நடத்துவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின அணிவகுப்பு இந்த ஆண்டு கெம்பல் பூங்காவில் ஆரம்பமாகவுள்ளது.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) ஏற்பாடு செய்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி காலி முகத்திடலில் உள்ள போராட்டக்காரர்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் இவ்வருடம் மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்யவில்லை.

மக்கள் விடுதலை தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாட்டின் நான்கு பகுதிகளிலும் மே தின ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது.
SHARE