மஹிந்த ராஜபக்ஷ இருக்குமிடத்தை வெளிப்படுத்தினார் பாதுகாப்புச் செயலர்..!!!


முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

பாதுகாப்பற்ற நிலையை கருத்திற்கொண்டே முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவரான முன்னாள் பிரதமரை பாதுகாப்பது அரசியலமைப்பின் படி முப்படையினருக்கு உரித்தாக்கப்பட்டுள்ள கடமையாகும் எனவும் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post


Put your ad code here