பாராளுமன்றில் நாளை வாக்கெடுப்பு..!!!




பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய சமர்ப்பித்த கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்படி நாளை (05) பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் என மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகித்த சில கட்சிகளை சேர்ந்த சுமார் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ள நிலையில் சியம்பலாபிட்டியவும் பதவி விலக தீர்மானித்திருந்தார்.

எவ்வாறாயினும், பிரதி சபாநாயகராக சியம்பலாபிட்டிய நாளை மீண்டும் தெரிவு செய்யப்படுவார் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here