4வது நாளாகவும் நங்கூரமிடப்பட்டுள்ள எரிவாயு கப்பல்..!!!


இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள 3,900 மெற்றிக் தொன் எரிவாயு கப்பலில் இருந்து 4வது நாளாகவும் எரிவாயுவை தரையிறக்க முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2.5 மில்லியன் டொலர்களை செலுத்த முடியாத காரணத்தினால் இவ்வாறு தரையிறக்க முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டு இன்றுடன் (11) 04 நாட்கள் நிறைவடைந்துள்ளன.

இதனால், பொதுமக்கள் எரிவாயு வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ கேட்டுக் கொண்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here