Friday 3 June 2022

யாழ்.தீவகம் - சரவணையில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற சிறுமியை காணவில்லை..!!!

SHARE

யாழ்ப்பாணம் – வேலணை, சரவணை பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் நேற்று மாலை காணாமல் போயுள்ளார்.

குறித்த சிறுமி தனியார் வகுப்பிற்குச் சென்ற நிலையில், காணாமல் போயுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர்கள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து காணாமல் போன சிறுமியை தேடும் பணியினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
SHARE