போராட்டக்காரர்களால் கையகப்படுத்தப்பட்ட அரச வளாகத்தில் 1,000 க்கும் மேற்பட்ட மதிப்புமிக்க கலைப்பொருட்கள் காணவில்லை - பொலிஸார்..!!!


போராட்டக்காரர்களால் கையகப்படுத்தப்பட்ட ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகை போன்ற அரச வளாகங்களில் இருந்து தொல்பொருள் பெறுமதியுடன் கூடிய 1000க்கும் மேற்பட்ட பொருட்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொருட்களை மீட்பதற்காக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த வளாகத்தில் உள்ள மதிப்புமிக்க தொல்பொருட்களின் சில பகுதிகளை சிலர் திருடிச் சென்றுள்ளதாக விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஜனாதிபதி மாளிகை தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள போதிலும் தொல்பொருள் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வ ஆவணங்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், முதற்கட்ட விசாரணையில் குறைந்தது 1000 பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Previous Post Next Post


Put your ad code here