9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான மின்வெட்டு விவரம் வெளியீடு..!!!



நாளை(09) முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, நாளை முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 3 மணித்தியாலங்கள் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது

இதன்படி, குறித்த நாட்களில் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை வேளையில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அவ்வாறே, M,N,O,X,Y,Z ஆகிய பகுதிகளுக்கு காலை 5.30 மணிமுதல் காலை 8.30 மணிவரையான காலப்பகுதியினுள் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு முன்னுரிமை வலயங்களில் காலை 6 மணி முதல் 8.30 மணிவரையான காலப்பகுதியில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post Next Post


Put your ad code here