தந்தையொருவர் மகனின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அவரது மனைவியும் மகனும் சேர்ந்து மண்வெட்டியினால் தாக்கி கொலைசெய்த கொடூர சம்பவமொன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது.
பதுளை- கஹட்டருப்ப பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான நபர் ஒருவரே இவ்வாறு மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் 33 வயதான மனைவியும் அவரது 17 வயதான மகனுமே இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், தற்போது அவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை துன்புறுத்தியதே கொலைக்கான காரணம் என சந்தேக நபரான மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் மனைவி கடந்த மே மாதம் 31ஆம் திகதி இந்த கொலையை செய்து, மகனுடன் சேர்ந்து சடலத்தை காட்டில் வீசிவிட்டு பொலிஸ் நிலையத்தில் தனது கணவனைக் காணவில்லை என முறைப்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news