Sunday 3 July 2022

எல்லை தாண்டி பருத்தித்துறை கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் கைது..!!!

SHARE

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீனபிடியில் ஈடுபட்ட குற்றத்தில் 12 இந்திய மீனவர்கள் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் நாளைய தினம் திங்கட்கிழமை நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
SHARE