Sunday 3 July 2022

நாளை மற்றும் நாளைமறுதினம் மின்வெட்டு விவரம் வெளியீடு..!!!

SHARE


நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய தினங்களில் 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

கொழும்பு மாநகரப் பகுதியில் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை இரண்டரை மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 1 மணிநேரமும் 40 நிமிடங்களும், இரவில் ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் M, N, O, X, Y, Z வலயங்களில் காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



SHARE