முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான முக்கிய செய்தி..!!!



எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் முச்சக்கரவண்டிகளுக்கு பதிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து மாத்திரமே எரிபொருளை பெற அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் உள்ள அனைத்து முச்சக்கரவண்டி சாரதிகளும் அந்தந்த பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், எரிவரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதிக்குள் தமக்கான எரிபொருள் நிரப்பு நிலையத்தை பரிந்துரைக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Previous Post Next Post


Put your ad code here