Sunday 31 July 2022

இனிவரும் நாட்களில் நாளாந்தம் ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு லிட்ரோ நிறுவன தலைவர்..!!!

SHARE


எரிவாயு விநியோகத்தை கட்டம் கட்டமாக வழமைக்கு கொண்டு வருவோம் என நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறதியை நிறைவேற்றியுள்ளோம். இனிவரும் நாட்களில் நாளாந்தம் ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

எரிவாயு விநியோக கட்டமைப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எரிவாயு விநியோகத்தை கட்டம் கட்டமாக வழமைக்கு கொண்டு வருவோம் என நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறதியை நிறைவேற்றுயள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். கடந்த மாதம் மாத்திரம் சந்தைக்கு சுமார் 20 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

இனிவரும் காலங்களில் நாளாந்தம் 1 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க தீர்மானித்துள்ளோம்.அத்துடன் எதிர்வரும் 4மாத காலத்திற்கு எரிவாயு விநியோக கட்டமைப்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதியாக குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

நுகர்வோர் கறுப்பு சந்தையில் அதிக விலைக்கு எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.அதிக விலைக்கு எரிவாயு சிலிண்டரை விற்பனை செய்யும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு உரிய தரப்பினரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
SHARE