சாதாரண தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி இடைநிறுத்தம்..!!!




கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்துவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள 94 ஐஓசி பெற்றோல் நிலையங்களுக்கு நேற்று திருகோணமலை ஐஓசி முனையத்தில் இருந்து எரிபொருள் பௌசர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐஓசி எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மூலம் மட்டுமே எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதால், அந்த நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகளை காணக்கூடியதாக இருக்கின்றது.
Previous Post Next Post


Put your ad code here