Thursday 11 August 2022

கண்ணீர் புகை குண்டுடன் ஒருவர் கைது

SHARE

 


வெலிக்கடை, மாளிகாவ மாவத்தை பகுதியில் கண்ணீர் புகை குண்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கடந்த 13 ஆம் திகதி பொல்துவ சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரின் முச்சக்கர வண்டியில் இருந்து காணாமல்போன கண்ணீர் புகை குண்டுகளில் ஒன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

நேற்று (10) மாலை சந்தேகநபர் கண்ணீர் புகை குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பத்தரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இன்று (11) அளுத்கடை நீதவான் நீதிமன்ற இலக்கம் 4 முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE