QR முறை தொடர்பில் அமைச்சரின் முக்கிய அறிவிப்பு..!!!


தேவைக்கு ஏற்ப QR குறியீட்டை ரத்து செய்து புதிய QR குறியீட்டை கோரும் வசதி வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையின் ஊடாக பெறப்படும் QR குறியீட்டை வேறு எவருக்கும் காட்சிப்படுத்தக் கூடாது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமக்குச் சொந்தமான QR குறியீட்டைப் பயன்படுத்தி வேறு எந்த நபரும் எரிபொருளைப் பெற முடியாதபடி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here