2 நாள் காய்ச்சல்; யாழில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!


யாழில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ்.வரணி வடக்கை சேர்ந்த கிட்டினன் தங்கலிங்கம் (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 27ம் திகதி வீட்டு மேசையில் இருந்த அம்மிக் குளவி அவரின் காலில் விழுந்துள்ளது.

இதனையடுத்து 2 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here