தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைப்பு..!!!


2022 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, கல்விப் பொதுச் தராதர உயர்தரப் பரீட்சை 2023 ஜனவரி 23 முதல் பிப்ரவரி 17 வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here